சிறுமிக்கு நேர்ந்த துயரம் கோப்புப்படம்
தமிழ்நாடு

ஆவடி: குளிர்சாதனப் பெட்டியை திறந்த 5 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் - போலீசார் விசாரணை

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை ஆவடி, நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர்கள் கவுதம் - பிரியா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் ரூபாவாதி தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ரூபாவாதி, நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, பிரிட்ஜை திறந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுமி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் மயக்கமடைந்தார்.

Hospital

இதனைக் கண்ட தாய் பிரியா, உடனடியாக மகளை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவ சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஆவடி போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.