தமிழ்நாடு

மக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது

மக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது

webteam

விருதுநகர் அருகே மக்காச்சோளக்காட்டில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே ஊரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

அருப்புக்கோட்டை அருகே பரளச்சி ராணி சேதுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் நேற்று தனது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு நள்ளிரவு நேரம் வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் இரவு முழுவதும் மோப்பநாய் உதவியுடன் தேடியநிலையில் மறுநாள் காலை மக்காச்சோளக்காட்டில் ராதா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சத்தியபாமா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் அதே ஊரைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

அதாவது, அதே ஊரை சேர்ந்த சோலையப்பனுக்கும் ராதாவிற்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று சோலையப்பன் வழக்கம் போல் ராதாவை சந்திக்க சோளக்காட்டுக்கு வரச்சொன்னதாக கூறப்படுகிறது. இதை கண்காணித்த அதே ஊரை சேர்ந்த அழகர்சாமி மற்றும் அவரது கூட்டாளிகளான நாகநாதன், முத்துமணி ஆகிய மூவரும் ராதாவை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

அப்போது, ராதா கூச்சலிடவே அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதை வெளியே சொன்னால் உனக்கும் இதே கதிதான் என்று சோலையப்பனை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சோலையப்பன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அழகர்சாமியையும் நாகநாதனையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் முத்துமணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.