தமிழ்நாடு

சென்னையில் 285 பேருக்கு கொரோனா: எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு பாதிப்பு?

சென்னையில் 285 பேருக்கு கொரோனா: எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு பாதிப்பு?

webteam

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நேற்றைய தினம் மட்டும் தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 50 பேருக்கு உறுதியானது. இதனால் சென்னையில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை கூடுதலாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் மண்டலம் வாரியாக எந்தெந்தப் பகுதியில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, ராயபுரம் - 91, திரு.வி.க நகர் - 38, தேனாம்பேட்டை - 36, தண்டையார்பேட்டை - 30, கோடம்பாக்கம் - 29, அண்ணாநகர் - 26, அடையாறு - 7, பெருங்குடி - 7, வளசரவாக்கம் - 5, ஆலந்தூர் - 5, திருவொற்றியூர் - 5, மாதவரம் - 3, சோழிங்கநல்லூர் - 2 என கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.