தமிழ்நாடு

மேல்மருவத்தூரில் 24 ரயில்கள் நின்று செல்லும்: ரயில்வே அறிவிப்பு

webteam

மேல்மருவத்தூரில் 24 ரயில்கள் நின்று செல்லும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேல்மருவத்தூரில் இதுவரை நிற்காமல் சென்ற விரைவு ரயில்கள், தைப்பூசம் மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துளளது. 

இதன்படி அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் ரயில்கள் நின்று செல்லும் எனக் கூறியுள்ள ரயில்வே நிர்வாகம், இதற்காக மொத்தம் 24 ரயில்கள் அடங்கிய பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.