தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 20 பேர் இன்று விடுவிப்பு

Rasus

தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை அரசு இன்று விடுதலை செய்கிறது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து வருகிறது. மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். ராமநாதபுரம், நாகை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 140-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் சமீபத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக அவர்கள் சிறையில் இருந்து வரும் நிலையில், அவர்களில் 20 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், மண்டபம் மற்றும் நாகையைச் சேர்ந்த தலா 4 மீனவர்கள் என 20 பேரை இலங்கை அரசு விடுக்கிறது. அவர்கள் அனைவரும், இன்று மாலைக்குள் காரைக்கால் துறைமுகம் வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.