Tragic decision pt desk
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் - விபரீத முடிவெடுத்த இளம்பெண் மற்றும் இளைஞர்

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள கௌதாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்ம மூர்த்தி (21). இவரும், அருகிலிருந்த வேறொரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியொருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்து இரு வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதாகக் கூறப்படுகிறது.

Name board

இந்நிலையில், நரசிம்ம மூர்த்தி மற்றும் சிறுமி விபரீத முடிவெடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெலமங்கலம் காவல் நிலைய போலீசார், சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.