தமிழ்நாடு

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் நிதியுதவி -முதல்வர்

Veeramani

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில், காட்டுமன்னார்கோவில் அருகிலுள்ள குருங்குடியில் நடந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் ஏழு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.