தமிழ்நாடு

காஞ்சிபுரம்: கல்குவாரி சரிந்து விபத்து -2 பேர் உயிரிழப்பு

webteam

கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மாத்தூர் கிராமத்தில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் 30க்கும் மேற்பட்டோர் வேலைப்பார்த்து வந்தனர். அப்போது குவாரியின் ஒரு ப்குதி சரிந்து அங்கு வேலைப்பார்த்து வந்தவர்களின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தகவலறிந்து வந்த மீட்பு பணியினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி மற்றும் 6 லாரிகள் கல்குவாரிக்கு அடியில் சிக்கியுள்ளன. இதில் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.