தமிழ்நாடு

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: வழக்கு ஒத்திவைப்பு

webteam

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. டிடிவி தினகரன் தரப்பில் அபிஷேக் சிங்கி வாதத்தை முன்வைத்தார். சபாநாயகர் நடுநிலை தவறி ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு 18பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தகுதிநீக்கம் குறித்த உத்தரவை சபாநாயகர் தாமதமாகவே அனுப்பியதாகவும் கூறினார். முதலமைச்சருக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை எனவும் விளக்கமளித்தனர்.

முதலமைச்சர் தரப்பில் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யபட்ட கூடுதல் மனுவில் என் மீதான குற்றச்சாட்டு அதிகம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. டிடிவி தினகரன் தரப்பு குற்றச்சாட்டை மறுத்த சபாநாயகர் தரப்பு, விளக்கமளிக்க போதிய அவகாசம் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

வாதங்களை கேட்ட நீதிபதி அனைத்து தரப்பினரும் வரும் 23-ம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.