15 ஐஏஎஸ் முகநூல்
தமிழ்நாடு

அமுதா ஐஏஎஸ் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

ஜெனிட்டா ரோஸ்லின்
  • தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் துறைகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • அந்தவகையில் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உணவுத்துறை செயலாளராக இருந்த கோபால் ஐஏஎஸ் கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல தமிழ்நாடு முழுவதும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுகுறித்து மேலும் அதிக தகவல்கலை கீழுள்ள இணைப்பில் காணலாம்...