தமிழ்நாடு

கோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழப்பு 15ஆக உயர்வு

webteam

கோவை மாவட்டத்தில் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விபத்திற்குள்ளானது. இதில் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 15 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 

தகவலறிந்து சென்ற மீட்புப்படையினர் மற்றும் போலீசார் இதுவரை 15 சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இறந்தவர்கள் பட்டியல் : 

குரு (45)
அரிசுதா (16)
ராம்நாதன்(20)
அட்சயா(7)
லோகுராம்(7)
ஒவியம்மாள்(50)
நதியா(30)
சிவகாமி(50)
நிவேதா(20)
வைதேகி(22)
ஆனந்தகுமார்(46)
திலாகவதி(50)
அருக்கணி(55)
ரூக்குமணி(40)
சின்னமாள்(70)