தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை

webteam

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில் நாளை மறுநாள் இமானுவேல் சேகரன் நினைவுதினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து, அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் தேவர் குரு பூஜை நடைபெறவுள்ளது.

இவ்விரு நிகழ்வுகளை முன்னிட்டு, சட்டம் -ஒழுங்கை கருத்தில் கொண்டு, மாவட்டம் முழுவதும் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் நடராஜன் அறிவித்துள்ளார்.