தமிழ்நாடு

தண்ணீர் திறக்க மேலூரில் சாலை மறியல் செய்த 1200 பேர் மீது வழக்குப்பதிவு

தண்ணீர் திறக்க மேலூரில் சாலை மறியல் செய்த 1200 பேர் மீது வழக்குப்பதிவு

webteam

முல்லைப் பெரியாறில் இருந்து தண்‌ணீர் திறந்துவிடக்கோரி மேலூரில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 1,200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறில் இருந்து ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேலூரில் சென்னை - கன்னியாகுமரி தேசிய நான்கு வழிச்சாலையை மறித்து 5 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கிராம நிர்வாக அலுவலர்கள் 4 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் காவல் நிலையத்தில் பெரியாறு - வைகை ஒருபோக பாசன சங்கத்தலைவர் முருகன் உள்ளிட்ட 1,200 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.