தமிழ்நாடு

கடலில் முழ்கிய கப்பல்: தூத்துக்குடி மாலுமியை மீட்க உறவினர்கள் கோரிக்கை

webteam

பிலிப்பைன்ஸ் அருகே கடலில் காணாமல் போன தூத்துக்குடியை சேர்ந்த மாலுமியை மீட்கக்கோரி, அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

துபாயை சேர்ந்த ஸ்டெல்லா ஓசா என்ற கப்பல் இந்திய மாலுமிகள் 26 பேருடன் பிலிப்பைன்ஸ் அருகே சென்றபோது நடுக்கடலில் கப்பல் மூழ்கியுள்ளது. அதில் 15 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த மாலுமி தாமஸ் உள்ளிட்ட 11 மீனவர்களின் நிலை தெரியவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்துள்ள அவர்கள், தாமசை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.