தமிழ்நாடு

தீபாவளி போனஸ் கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

Rasus

தீபாவளி போனஸ் கோரி, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். 

மதுரையில் தமிழ்நாடு 108 அவசர ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது,
பொதுக்குழு கூட்டத்தில், தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும், ஊக்கத்தொகை 5,300-ல் இருந்து 12,000 ஆக உயர்த்தப்பட வேண்டும், 2 ஆண்டுகளாக
நிலுவையில் உள்ள விடுப்பு தொகையினை வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 17-ஆம் தேதி இரவு 8 மணி முதல்
அக்டோபர் 18-ஆம் தேதி இரவு 8 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அக்டோபர் 18 இரவு 8 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக, மாநில பொது செயலாளர் உலகநாதன் கூறுகையில் "போராட்டத்தில் 4,000 தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர், தமிழக அரசும்- ஜி.வி.கே
நிர்வாகமும் எங்களை அழைத்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும்" என கூறினார்.