தமிழ்நாடு

துப்பாக்கிகுண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

துப்பாக்கிகுண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

EllusamyKarthik

புதுக்கோட்டை அருகே தலையில் துப்பாக்கிகுண்டு பாய்ந்து படுகாயமடைந்த 11 வயது சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தஞ்சை அரசு மருத்துவமனையில் நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. இந்த நிலையில் சிறுவன் உயிரிழப்பு. 

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பசுமலைப்பட்டியில் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அன்று காவலர் பயிற்சி மையத்திலிருந்து வெளியேறிய துப்பாக்கிகுண்டு பாய்ந்து சிறுவன் படுகாயமடைந்தார் சிறுவன் புகழேந்தி.