விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் உலக லெவன் அணி அபார வெற்றி

webteam

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலக லெவன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தானின் லாகூரில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, பாபர் அசாம் 45 ரன்களும், அகமது ஷேசாத் 43 ரன்களும் எடுத்தனர். 175 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய உலக லெவன் அணி, 14 ‌ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. கடைசி 2 ஓவர்களில், வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டன. ஹாசிம் ஆம்லா, திசாரா பெரேரா ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

ஒரு பந்து மீதமிருந்த நிலையில், உலக லெவன் அணி வெற்றி இலக்கை எட்டியது. ஆம்லா 72 ரன்களும் பெரேரா 19 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரு அணிகள் இடையிலான தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிப்பதற்கான கடைசிப் போட்டி லாகூரில் நாளை நடைபெறவுள்ளது.