விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை பிரபலப்படுத்த ராட்சத நீர் சறுக்கு

webteam

தென்கொரியாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக்கை பிரபலப்படுத்த ராட்சத நீர் சறுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் 2018-ஆம் ஆண்டு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கை பிரபலப்படுத்தும் நோக்குடன் தலைநகர் சியோலில் ராட்சத நீர் சறுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், நூற்றுகணக்கானோர் விளையாடி மகிழ்ந்தனர். 2018-ஆம் ஆண்டு தென்கொரியாவின் பியோன்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி இதுவாகும். கடைசியாக, 1988-ஆம் ஆண்டு சியோல் நகரம் ஒலிம்பிக் போட்டியை நடத்தியது.