விளையாட்டு

பளுதூக்கும் வீராங்கனை சீமாவுக்கு 4 ஆண்டுகள் தடை

பளுதூக்கும் வீராங்கனை சீமாவுக்கு 4 ஆண்டுகள் தடை

jagadeesh

ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதால் இந்திய பளுதூக்கும் வீராங்கனை சீமாவுக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

34 ஆவது தேசிய பெண்கள் பளுதூக்குதல் போட்டியின்போது எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனை செய்த போது சீமா ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானது. இதனால் சீமா 4 ஆண்டுகள் விளையாட தேசிய ஊக்கமருத்து தடுப்பு முகமை தடை விதித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் சீமா வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.