விளையாட்டு

''வருத்தமான நிலை தான்; ஆனால் நாங்கள் மீண்டு வருவோம்'' - விராட் கோலி

''வருத்தமான நிலை தான்; ஆனால் நாங்கள் மீண்டு வருவோம்'' - விராட் கோலி

webteam

தாங்கள் மீண்டு வருவோம் என நம்பிக்கையுள்ளதாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 

சென்னை, மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்தது ராயல் சேலஞ்சர்ஸ். இந்நிலையில் நேற்றைய போட்டியிலும் தோல்வியை சந்தித்து பரிதாப நிலையில் உள்ளது.

இந்நிலையில் அணியின் நிலை குறித்து கேப்டன் கோலி கருத்து தெரிவித்துள்ளார். ''நடப்பு ஐபிஎல் தொடரில் எங்கள் அணி சிறந்த தொடக்கத்தை கொடுக்கவில்லை. இது வருத்தமான நிலை தான். ஆனால் நாங்கள் மீண்டு வருவோம் என நம்பிக்கையுள்ளது.

நாங்கள் மும்பைக்கு எதிராகவும், ராஜஸ்தானுக்கு எதிராகவும் நன்றாக விளையாடினோம். எங்களுக்கு சில தன்னம்பிக்கை தேவைப்படுகிறது. எங்களது அணி வீரர்களுடன் அமர்ந்துபேசி அணிக்கான சில தேவையை குறித்து ஆலோசிக்க வேண்டும். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சில கேட்ச்சுகளை தவறவிட்டோம். பல தவறுகளை செய்ததால் நேற்றைய போட்டியில் தோற்க நேர்ந்தது’’ என்று தெரிவித்துள்ளார்

ராயல் சேலஞ்சர்ஸ் அணி வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.