ஹசரங்கா கோப்புப்படம்
T20

டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஹசரங்கா... காரணம் என்ன?

PT WEB

இலங்கை டி20 அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா, அப்பொறூப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில், வனிந்து ஹசரங்கா தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி, முதல் சுற்றிலேயே வெளியேறியது.

ஹசரங்கா

இந்தநிலையில் ஹசரங்கா, டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், வீரராக தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், வரும் 26 ஆம் தேதி இலங்கையில் தொடங்கவுள்ள நிலையில், ஹசரங்கா கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது..