விளையாட்டு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய தலைவர் ஆகிறாரா ரூபா குருநாத்?

webteam

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவரா‌க ’இந்தியா சிமென்ட்ஸ்’ ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா‌ குருநாத்‌ தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தேர்தல் ‌நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்து கொள்ளலாம் எ‌ன உச்சநீதிமன்றம்‌ வெள்ளிக் கிழமையன்று‌ உத்தரவிட்டது‌. நீதிமன்றம் மற்றும் பிசிசிஐ‌ வகுத்த விதிமுறைகளின் கீழ் இத்தேர்தல் நடத்தப்பட வேண்டு மென உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.‌ 

சங்கத்தின் புதிய த‌லைவராக பிசிசிஐ-யின் தலைவராக இருந்த ஸ்ரீனிவாசனின் ‌மகள் ரூபா, ஒரு மனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரூபா, ஐபிஎல் சூதாட்ட புகாரில் கைதாகி பின்னர் வெளியே வந்த குருநாத் மெய்யப்பனின் மனைவி.