விளையாட்டு

நடப்பு ஐபிஎல் சீஸனிலிருந்து புவனேஷ்வர் குமார் விலகல்?

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீஸனிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹைதராபாத் அணியின் பவுலிங் யூனிட்டை வழிநடத்தி செல்லும் அனுபவ வீரரான புவனேஷ்வர் குமார் சென்னை அணியுடனான லீக் ஆட்டத்தில் பத்தொன்பதாவது ஓவரை வீசிய போது காயம்பட்டார். 

ஒரு பந்து மட்டுமே வீசிய நிலையில் அந்த போட்டியிலிருந்து விலகிய அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டத்திலும் விளையாடவில்லை.

‘எப்படியும் அடுத்த சில போட்டிகளில் புவி தயாராகி விடுவார்’ என ஹைதராபாத் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் இந்த சீஸனில் எஞ்சியுள்ள ஆட்டங்களில்  விளையாடமாட்டார் என சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஹைதராபாத் அணிக்காக விளையாட இருந்த மிட்சல் மார்ஷும் காயம் காரணமாக வெளியேறியிருந்தார்.

அடுத்தடுத்து இரண்டு வீரர்களை ஒரே சீஸனில் ஹைதராபாத் இழந்துள்ளது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.