விளையாட்டு

ஷிகர் தவானை தேடிய மகன்: வைரலாகும் வீடியோ

ஷிகர் தவானை தேடிய மகன்: வைரலாகும் வீடியோ

webteam

தேசிய கீதம் பாடப்படும் போது இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவானை, அவரது மகன் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷத்தில் கத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர். இந்த காட்சியை தனது வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் பார்த்த ஷிகர் தவானின் மகன் ஸோரோவர், தனது தந்தையை காட்டும் போது உற்சாகத்தில் கத்தி உள்ளான். இந்த அழகான பதிவை வீட்டில் இருந்த தவானின் மனைவி போனில் பதிவு செய்து வைத்துள்ளார். இந்த வீடியோவை தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வரிகளுடன் பதிவிட்டுள்ளார். அதில், என் மகன் என்னை தேடும் காட்சியை பார்க்கும் போது எனக்கு கண்ணீரே வந்து விட்டது. எனக்கு எல்லாமே எனது மகன்தான். நான் பார்த்திலேயே எனக்கு மிகவும் பிடித்த வீடியோ இதுதான் என்று தவான் உணர்ச்சிவசமாக பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த வீடியோவிற்கு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் தவான் அதிரடியாக ஆடி 68 ரன்களை குவித்தார். இந்தியா எளிதாக வென்று ஒருநாள் தொடரை சமன் செய்யதில் தவானின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது.