ஷிகர் தவான் புதிய தலைமுறை
விளையாட்டு

"எனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றி..": ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.

PT WEB

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வீடியோ செய்தி மூலம் ஓய்வை அறிவித்துள்ள ஷிகர் தவான், தனக்கு பக்கபலமாக இருந்த ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறியதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்திய அணியில் விளையாடியதால் தனக்கு புதிய குடும்பம், புகழ், அன்பு ஆகியவை அதிகமாக கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பங்கு வகித்துள்ள தவான், 34 டெஸ்ட், 167 ஒருநாள், 68 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.