விளையாட்டு

“விராட் கோலி அடுத்து ஆடவுள்ளார் என்றால்..” : மனம்திறந்த சஞ்சு சாம்சன்

webteam

தனக்கு பின் விராட் கோலி களமிறங்கவுள்ளார் என்றால், நிதானமான பேட்டிங்கை செய்ய முடியாது என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அவ்வப்போது இடம் பிடிப்பவர் சஞ்சு சாம்சன். ஐபிஎல் போட்டிகளில் இவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இறுதியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி ஆடிய தொடர்களில் பங்கேற்றார். இந்நிலையில் இந்திய அணியின் அனுபவங்கள் மற்றும் ஐபிஎல் தொடர் குறித்து சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார்.

அவர் கூறும்போது, “இந்திய அணியின் டி20 போட்டிகளில் வேகமாக ரன்களை குவிக்க வேண்டும். நமக்கு பின்னர் விராட் கோலி களமிறங்கவுள்ளார் என்றால், நம்மால் 10 பந்துகளை கூட ரன் எடுக்காமல் தவறவிட்டு நிதானமாக ஆட முடியாது. அதைத் தான் நான் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறேன்” என்றார்.

அத்துடன் தான் உட்பட அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் தொடருக்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாக கூறினார். ஐபிஎல் தொடர் நடந்தால், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுமே மீண்டு எழும் என தெரிவித்தார்.