விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயார்: மேரி கோம்

webteam

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிக்குத் தயார் என குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். 

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிக்காக தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், தாம் வலிமையுடன் இருப்பது போல் உணர்வதாகவும் மேரி கோம் கூறியுள்ளார். தமக்கு விருப்பமான 48 கிலோ எடைப்பிரிவில் மீண்டும் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக 5 முறை உலகச் ‌சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேரி கோம் தெரிவித்தார். ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டி வியட்நாமில் அடுத்த மாதம் 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க உள்ள இந்திய வீராங்கனை‌கள் டெல்லியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.