விளையாட்டு

ரஹானே அதிரடி சதம் - 191 குவித்த ராஜஸ்தான் அணி

ரஹானே அதிரடி சதம் - 191 குவித்த ராஜஸ்தான் அணி

webteam

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 191 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ரன் அவுட் ஆகினார். ஆனால் மற்றொரு ஆட்டக்காரரான ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தார். 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் விக்கெட்டை பறிகொடுத்தார். நிலைத்து விளையாடிய ரஹானே சதம் அடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஹானே 63 பந்தில் 105 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.