விளையாட்டு

தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு 8 வருடம் தடை!

தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு 8 வருடம் தடை!

webteam

இந்திய தடகள வீராங்கனை பிரியங்கா பன்வாருக்கு 8 வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தடகள வீராங்கனை பிரியங்கா பன்வார். 29 வயதான இவர், 2014-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். கடந்த வருடம் இவர் இரண்டாவது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு, விசாரணை நடத்தியது. இதன் முடிவை நேற்று அறிவித்தது. இதன்படி பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாட, தடை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கிடப்படும். இதன் மூலம் அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

‘பிரியங்காவுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று ஒழுங்கு நடவடிக்கைக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.