பிரீத்தி பால் pt web
விளையாட்டு

ஒரே பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள்... அசத்தும் தடகள வீராங்கனை ப்ரீத்தி பால்

PT WEB

பாராலிம்பிக் தொடரில், இந்திய தடகள வீராங்கனை பிரீத்தி பால் இரண்டாவது பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஏற்கனவே 100 மீட்டர் T35 பிரிவுக்கான ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய பிரீத்தி பால், தற்போது 200 மீட்டர் T35 பிரிவுக்கான ஓட்டப்பந்தயத்திலும் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 30.01 விநாடிகளில் 200 மீட்டர் இலக்கை கடந்து தனது தனிப்பட்ட சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

preethi pal

இந்த போட்டியில், சீன வீராங்கனைகள் முதல் இரண்டு இடங்களையும் பிடித்தனர். 23 வயதான பிரீத்தி பால், ஒரே பாராலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதேபோல், உயரம் தாண்டுதல் போட்டியின் T47 பிரிவில், இந்திய வீரர் நிஷாத் குமார் 2.04 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். கடந்த டோக்கியோ பாராலிம்பிக் தொடரிலும், இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.