விளையாட்டு

ரூ.450 கோடி நஷ்ட ஈடு கேட்கிறது பாக். கிரிக்கெட் வாரியம்

ரூ.450 கோடி நஷ்ட ஈடு கேட்கிறது பாக். கிரிக்கெட் வாரியம்

webteam

பரஸ்பர கிரிக்கெட் தொடரை தவிர்த்ததற்காக, பிசிசிஐ 450 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது. 

இதுகுறித்து கராச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி, 2014-ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்‌படி இந்திய அணி, 6 போட்டித் தொடர்களில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய கிரிக்கெட் வா‌ரியம் தவறிவிட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் 70 மில்லியன் டாலரை (ரூ.450 கோடி) எங்களுக்கு நஷ்ட ஈடாக தர வேண்டும்’ என்று தெரிவித்தார்.