ஒலிம்பிக் போட்டி முகநூல்
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி 2024 | வில் வித்தை பிரிவில் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

PT WEB

ஒலிம்பிக் வில்வித்தையில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஒலிம்பிக் தொடர் மிக பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இதற்கு முன்பாகவே சில போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வில்வித்தை தரவரிசைப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆடவர் அணி பிரிவில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 2013 புள்ளிகள் எடுத்து 3 ஆவது இடத்தை பிடித்தது.

முதலிடத்தை கொரியாவும், 2 ஆவது இடத்தை பிரான்ஸூம் பிடித்தன. இந்த வரிசையில் 4 ஆவது இடத்தில் சீனா உள்ளது. இந்த 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேபோல், மகளிர் பிரிவில் இந்தியா 1983 புள்ளிகள் பெற்று 4 ஆவது இடத்தை பிடித்தது. முதலிடத்தை பிடித்த கொரியா 2046 புள்ளிகள் பெற்றது. 2 ஆவது மற்றும் 3 ஆவது இடத்தை சீனா மற்றும் மெக்சிகோ பிடித்துள்ளன. அதன்படி, இந்த 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.