விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை வாஷ் அவுட் ஆக்குமா இந்திய அணி?

webteam

இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஐந்தாவது போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகளில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், கோலி, ராகுல், பாண்டே, தோனி, ஹார்திக் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  பும்ரா, ஷர்துல், அக்சர் ஆகியோர் சிறப்பான முறையில் பந்துவீசி வருகின்றனர். இலங்கை அணியைப் பொறுத்தவரை ஆறுதல் வெற்றியாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் விளையாடும் என்பதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கெனவே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.