விளையாட்டு

அடுத்த ஒலிம்பிக்கில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை ஏற்பதாக அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

அடுத்த ஒலிம்பிக்கில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை ஏற்பதாக அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

JustinDurai
தடகள வீராங்கனை ரேவதி அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஏற்படும் செலவை ஏற்பதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த வீராங்கனை ரேவதிக்கு அவர் படித்த கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் வீராங்கனை ரேவதி, பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது.
ஆனால் பயிற்சியாளர் தாம் பெற்ற பரிசுத்தெகையை மேடையிலேயே ரேவதிக்கு வழங்கினார். மேலும் விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி, ரேவதியின் சாதனைகளை பார்த்து மேலும் பலர் உருவாக வேண்டும் எனவும், அவர் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தேவையான செலவை தாமே ஏற்பதாகவும் கூறினார்.