விளையாட்டு

வெற்றியுடன், திருப்பத்தையும் பெற நினைக்கிறோம்: ரபாடா உருக்கம்!

webteam

இந்தியாவை வெற்றி பெற்று ஒரு திருப்பத்தை அடைய நினைப்பதாக தென்னாப்பிரிக்க பந்துவீச்சளார் ரபாடா கூறியுள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று கேப் டவுனில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளதால், 3வது போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. 

இதுதொடர்பாக பேசியுள்ள தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ரபாடா, “எங்கள் அணியில் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடன் விளையாடவில்லை. இது எல்லோருக்கும் பொருந்தாது. இந்தியா ஒரு சிறந்த அணி, கிரிக்கெட்டில் அது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. அத்துடன் சிறந்த ஒற்றுமையையும் பெற்றுள்ளது. நாங்கள் ஒருநாள் போட்டியை பொருத்த வரையில், சாம்பியன்ஸ் ட்ரோபி தொடர் முதலே பொலிவற்ற தன்மையுடன் உள்ளோம். 

அதில் இருந்து மீண்டு வர நினைக்கின்றோம். நாம் வெற்றி பெரும் போது, யாரும் எப்படி வெற்றி பெற்றோம் என விடை தேடுவதில்லை. ஆனால் தோல்வி பல கேள்விகளை எழுப்புகிறது. அது பல எதிர்வினைகளையும் ஏற்படுத்துகிறது. நாங்கள் இந்தியாவிடம் ஒரு வெற்றியுடன் கூடிய திருப்பத்தையும் பெற நினைக்கின்றோம்” என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.