விளையாட்டு

வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு திடீர் ஊக்க மருந்து சோதனை!

webteam

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு திடீரென நேற்று ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இந்த தொடரில் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. சவுதாம்டனில் நாளை நடக்கும் இந்த போட்டிக்காக, இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க அணி, தான் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளதால், இந்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது, பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

பயிற்சியில், பும்ரா நேற்று ஈடுபட்டிருந்தபோது, அவரை மட்டும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் அழைத்துச் சென்றனர். இதை மைதான அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  இரண்டு கட்டமாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதலில், சிறுநீர் சோத னையும் 45 நிமிடத்துக்கு பின் ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனை முடிவு பற்றி இதுவரை எந்த தகவ லும் இல்லை. வேறு எந்த வீரருக்கும் ஊக்கமருந்து சோதனை நடத்தப் பட்டதா என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.இந்த ஊக்க மருந்து சோதனையை, இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.