விளையாட்டு

அஸ்வின் இனி இந்திய அணியில் விளையாடுவது சந்தேகமே: ஹர்பஜன் சிங்

webteam

தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு இனி அடுத்தடுத்து இந்திய அணியில் இடம் கிடப்பது சந்தேகம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, நாளை நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘தற்போது இந்திய அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் ஜடேஜா சிறந்த வீராரக செயல்பட்டு வருகிறார். அத்துடன், அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால், இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கிறார். ஆனால், அஷ்வினுக்கு வேண்டும் என்றே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். புதிதாக அணியில் இடம்பிடித்துள்ள குல்தீப் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்தும் நிலையில் அஷ்வின், ஜடேஜாவின் இடங்களுக்கு நெருக்கடி ஏற்படும். சிறந்த பீல்டர் என்பதால் மீண்டும் அணிக்கு திரும்ப ஜடேஜாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அஷ்வினுக்கு அடுத்து அணியில் இடம் கிடைப்பது சந்தேகமே’ எனத் தெரிவித்தார்.