பாரிஸ் ஒலிம்பிக் முகநூல்
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்|தமிழகத்திலிருந்து பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் யார் யார்?

PT WEB

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் தமிழகத்திலிருந்து பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் யார்யார்?...இப்போது பார்க்கலாம்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 117 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 13 பேரும் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்டரின், மும்முறை தாண்டுதலில் பிரவீன் சித்திரவேல் பங்கேற்கின்றனர். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்கும் 4 வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் தமிழரசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பெண்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியக் குழுவில் சுபா வெங்கடேசன், வித்யா ராமராஜ் ஆகியோர் உள்ளனர். பாய்மரப்படகு போட்டியில் பெண்கள் பிரிவில் நேத்ரா குமணன், ஆண்கள் பிரிவில் விஷ்ணு சரவணன் பங்கேற்கின்றனர். துப்பாக்கிச்சுடுதலில் டிராப் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் களமிறங்குகிறார்.

துப்பாக்கிச்சுடுதலில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனி நபர், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் குழு பிரிவில் இளவேனில் வாலறிவன் போட்டியிடுகிறார். டேபிள் டென்னிசில் அச்சுந்தா சரத்கமல் களமிறங்க உள்ள நிலையில் ரிசர்வ் வீரராக சத்யன் ஞானசேகரன் இடம் பெற்றுள்ளார். டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் பாலாஜி விளையாடுகிறார்.