விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டி - சதம் விளாசினார் மயங்க் அகர்வால் 

webteam

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் சதம் விளாசினார். 

இந்தியா தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதல் முறையாக தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 154 பந்துகளை எதிர்கொண்டு தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

ரோகித் சர்மாவுடன் களம் இறங்கிய மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 59.1 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்தால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர். அப்போது விக்கெட் இழப்பின்றி ரோகித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் களத்தில் இருந்தனர். 

அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இதில் மயங்க் அகர்வால் சதமடித்தார். 204 பந்துகளில் 13 பவுண்ட்ரி, 2 சிக்ஸ் உதவியுடன் சதமடித்தார்.