விளையாட்டு

இந்தியா - தென்னாப்ரிக்கா முதல் டி20 போட்டி மழையால் ரத்து

webteam

இந்தியா - தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. இதில் முதல் டி20 போட்டி தர்மசாலாவில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்கவிருந்தது

இந்நிலையில் மழை காரணமாக போட்டி தாமதமானது. இன்று மதியம் வரை மழை பெய்து வந்ததால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. அத்துடன் தற்போது மழை பெய்து வருவதால் ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் நடைபெறுமா என்றும் சந்தேகம் எழுந்த நிலையில் போட்டி தற்போது ரத்து செய்யப்பட்டது.