விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி: இந்தியா பவுலிங் 

jagadeesh

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 347 ரன்கள் குவித்தும் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் ஆக்லாந்தில் நடைபெறும் இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்தப் போட்டியில் அணியில் இடம்பெற்ற குல்தீப் மற்றும் ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு, சாஹல், சைனி சேர்க்கப்பட்டுள்ளனர்.