விளையாட்டு

37 வயது வீரரை வீழ்த்திய தமிழ்நாட்டின் செஸ் சாம்பியனான 15 வயது பிரக்ஞானந்தா

jagadeesh

உலக சதுரங்க போட்டியில் 37 வயது வீரரை வீழ்த்திய, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக சதுரங்கப் போட்டியில் 2ஆவது சுற்றில் ஆர்மீனியா நாட்டின் 37 வயது வீரர் கார்பிரயல் சர்கிசியனை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மென்மேலும் வெற்றி பெற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.