விளையாட்டு

புரோ கபடி லீக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?

webteam

புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் தகுதிப் போட்டியில் குஜராத் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

மும்பையில் இரவு 8 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிவிடும். தோல்வி அடையும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற மேலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. புனே - பாட்னா அணிகள் இடையே நாளை நடைபெறும் மூன்றாவது நாக்அவுட் போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்த்து, இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி விளையாடும். நேற்று நடைபெற்ற நாக்அவுட் சுற்று போட்டியில்  புனேரி பல்டன்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் வெற்றி பெற்றன

இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணியை தேர்வு செய்யும் போட்டி சென்னையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.