விளையாட்டு

அபார சதம் அடித்தார் ராகுல் டிராவிட் மகன்!

webteam

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படுபவர், முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். இவரது மூத்த மகன் சமித்.  கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் பள்ளிகளுக்கு இடையேயான பிடிஆர் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது.  பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான இந்தப் போட்டியில் சமித், மல்லையா அதிதி சர்வதேச பள்ளியின் சார்பில் விளையாடினார்.

விவேகானந்தா பள்ளிக்கு எதிரான போட்டியில் இவர், 150 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து அவர் ஆடிய அணி, வெற்றி பெற்றது. இதே அணியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் சுனில் ஜோஷியி ன்மகன், ஆர்யன் 154 ரன்கள் குவித்தார்.