விளையாட்டு

தோனி, தன் நிலையை உணரவேண்டும்: சேவாக்

தோனி, தன் நிலையை உணரவேண்டும்: சேவாக்

webteam

டி20 கிரிக்கெட்டில் தோனி தன் நிலையை உணரவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். 

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய தோனி, ரன் குவிக்க திணறினார். 37 பந்துகளில் 49 ரன்கள் குவித்தாலும் பல பந்துகளை வீணடித்தார். இதையடுத்து அவரது பார்ம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. 
இந்நிலையில் சேனல் ஒன்றில் பேசிய வீரேந்திர சேவாக், ‘அணியில் தனது நிலையை தோனி உணரவேண்டும். கடினமான இலக்கை துரத்தும் போது, முதல் பந்தில் இருந்தே அவர் அடித்து ஆட வேண்டும். அவரிடம் அணி நிர்வாகம் இதை புரிய வைக்க வேண்டும். டி20 போட்டிக்கும் தோனியின் தேவை இருக்கிறது. அவர் விலகுவது பற்றி கேட்கிறார்கள். அவர், சரியான நேரத்தில் அணியில் இருந்து விலகுவார். அடுத்தவருக்கான வாய்ப்பை அவர் தடுக்க மாட்டார்’ என்றார்.