விளையாட்டு

“பதட்டமான ரன் சேஸிங்கில் தோனியின் கால்குலேஷன் துல்லியமாக இருக்கும்” - சிஎஸ்கே பயிற்சியாளர்

ச. முத்துகிருஷ்ணன்

சென்னை அணிக்காக பதட்டமான ரன் சேஸிங்கைத் திட்டமிட்டு கணக்கிடுவதில் வல்லவர் எம்.எஸ். தோனி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவர். முன்னாள் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல போட்டிகளில் இறுதிவரை களத்தில் நின்று வெற்றி பெற்று தந்துள்ளார், இன்றும் அதையே செய்து வருகிறார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தது சென்னைக்கு 2வது வெற்றியை பெற்றுத் தந்தது. ஜெய்தேவ் உனட்கட் வீசிய கடைசி நான்கு பந்துகளில் 16 ரன்களுக்கு அடித்து நொறுக்கினார் தோனி. பிளேஆஃப்களுக்குச் செல்வதற்கான சென்னையின் நம்பிக்கையை உயிர்ப்பித்தார்.

2019 ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியாவுக்காக கடைசியாக விளையாடிய தோனி, தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மட்டுமே விளையாடுகிறார். இன்னும் டெத் ஓவர்களில் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்த வீடியோவில், முன்னாள் ஆஸ்திரேலிய மிடில்-ஆர்டர் பேட்டரும், சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளருமான மைக்கேல் ஹஸ்ஸி, முன்னாள் சிஎஸ்கே கேப்டன் தோனியின் வியூகம் எப்படி என்றும் பதட்டமான சேசிங்குகளில் அவரது மனதில் என்ன கணக்குகள் செல்கின்றன என்பதையும் விளக்கினார். 

“தோனி சுவாரசியமானவர், ஏனென்றால் அவர் ஆட்டத்தின் மத்தியில் அதனை போக்கை மிகவும் கணக்கிடக்கூடியவர். அதாவது, நாங்கள் அவருடன் நடுவில் உரையாடுகிறோம். மேலும் நிகர ரன் ரேட் அதிகரித்து வருவதால் நான் கொஞ்சம் பயப்படத் தொடங்குவேன். நான் அடிக்க வேண்டும் என்றாலும், அவர், ‘கவலைப்படாதே, அவர்கள் இன்னும் பந்து வீசப் போகிறார்கள், எங்கு பந்து வீசுவது என்று அவருக்குத் தெரியாது, நாம் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்’ என்று அவர் இறுதி வரை செய்ய வேண்டிய அனைத்தையும் கணக்கிட்டுக் பேசுவார்” என்று சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் ஹஸ்ஸி கூறினார்.