விளையாட்டு

மாறி, மாறி ஓவர் த்ரோவ் : மண்டை சூடான தோனி!

webteam

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 154 என்ற இலக்கை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 56வது போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையே, புனேவில் நடைபெற்று
வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்
அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் மனோஜ் திவாரி 35 (30), டேவிட் மில்லர் 24 (22), கருன் நாயர் 54 (26) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப
ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். சென்னையின் அணி லுங்கி இங்கிடி 4 ஓவர்கள் பந்துவீசி, வெறும் 10 ரன்கள் மட்டுமே
கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சில் பஞ்சாப் அணியே மிரண்டு போனது.

இதற்கிடையே சென்னை அணியின், பந்துவீச்சின் போது 8வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின், 5வது பந்தை திவாரி
அடிக்க, அது ஜடேஜாவிடம் சென்றது. பந்தை பிடித்த வேகத்தில் ரன் அவுட் எடுக்கும் முனைப்பில் ஸ்டெம்பை நோக்கி அடித்தார் ஜடேஜா.
ஆனால் அது ஸ்டெம்பில் படாமல் நேராக, ப்ராவோ கைக்கு சென்றது. அதை எடுத்த வேகத்தில் ப்ரவோ தோனி நிற்கும் ஸ்டெம் பக்கம்
அடித்தார்.

அதை தோனியும், ராயுடும் பிடிக்காமல் விட்டனர். அது நேராக பில்லிங்ஸிடம் சென்றது. அதை அவர் சர்துல் தாகூரிடம்
வீசினார். ஒருவழியாக பந்து கைக்கு வந்தது. அதற்குள் திவாரியும், மில்லரும் 3 ரன்கள் ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தோனி உட்பட ஜடேஜா, பிராவோ, தாகூர் அனைவரையும் மண்டை சூடாக்கியது.