விளையாட்டு

3 புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே !

jagadeesh

 13 ஆவது ஐபிஎல் டி20 தொடர் அடுத்தாண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலம் தொடங்குவதற்கு முன்பாக வீரர்களை தேர்வு செய்ய சென்னை சூப்பா் கிங்ஸிடம் ரூ.14.60 கோடி கைவசம் இருந்ததது. இந்தாண்டு சிஎஸ்கேவில் இருந்த 5 வீரர்களை வெளியேற்றியது. இதனையடுத்து 5 புதிய வீரர்களை எடுக்க சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே மூன்று வீரர்களை வாங்கியது.

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டரான சாம் குரனை ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்கடுத்து அனுபவம் வாய்ந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இறுதியாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேஸல்வுட்டை ரூ.2 கோடிக்கும் வாங்கி ஏலத்தை முடித்துக்கொண்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்: மகேந்திர சிங் தோனி, ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, டூ புளசீஸ், சுரேஷ் ரெய்னா, என்.ஜெகதீசன், முரளி விஜய், ரித்துராஜ் கெய்க்வாட், பிராவோ, ஜடேஜா, மிட்சல் சாண்ட்னர், மோனு சிங், சாம் குரன், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், கரன் சர்மா, பியூஷ் சாவ்லா, லுங்கி நிகிடி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், கேஎம் ஆசிப், ஜோஷ் ஹேசல்வுட்.