ஜெய் ஷா web
கிரிக்கெட்

ஐபிஎல் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒவ்வொரு வீரருக்கும் கூடுதலாக 1 கோடி! ஜெய் ஷா கொடுத்த அப்டேட்!

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் கூடுதலாக ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் என ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரானது மெகா ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. எம்எஸ் தோனி, ரோகித் சர்மா முதலிய ஸ்டார் கேப்டன்களின் மூவ் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 2025 ஐபிஎல் தொடரானது தற்போதே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ipl

புதியதாக ஐபிஎல் விதிமுறைகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், “ஒவ்வொரு அணிக்கும் 5 வீரர்களை தக்கவைக்கும் உரிமையும், ஒரு வீரரை RTM மூலம் தக்கவைக்கும் உரிமையும் வழங்கப்படவிருப்பதாக” தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடருக்கான கூடுதல் சிறப்பம்சமாக ஜெய் ஷா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி ஒவ்வொரு வீரருக்கும் பம்பர் பரிசாக ரூ.1.02 கோடி கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீரருக்கும் கூடுதலாக 1.05 கோடி..

ஒவ்வொரு ஐபிஎல் தொடரின்போது பிசிசிஐ மற்றும் ஐபிஎல் முன்னெடுக்கும் நடவடிக்கையானது, ஐபிஎல் தொடரை மேலும்மேலும் உச்சத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக அமைந்துவருகிறது.

இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஜெய் ஷா அறிவித்திருக்கும் கூடுதல் பணம் என்பது வீரர்களை மேலும் உற்சாகப்படுத்தும் செய்தியாக மாறியுள்ளது.

2025 ipl

தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஜெய் ஷா, “ஐபிஎல்லில் கன்சிஸ்டன்ஸி உடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களை கொண்டாடும் விதமாக, எங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு ரூ.7.5 லட்சம் போட்டிக் கட்டணமாக வழங்கும் ஒரு வரலாற்று நடவடிக்கையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதவாது, “ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர், அவருடைய ஒப்பந்த தொகையுடன் சேர்த்து கூடுதலாக ரூ.1.05 கோடியை பெறுவார். இதற்காக ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் சீசனுக்கான போட்டிக் கட்டணமாக ரூ.12.60 கோடிகளை ஒதுக்குவார்கள். ஐபிஎல்லுக்கும் நமது வீரர்களுக்கும் இது ஒரு புதிய சகாப்தம்!” என்று ஜெய் ஷா பகிர்ந்துள்ளார்.