விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்கம்!

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்கம்!

webteam

ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. 

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் பங்கேற்கின்றனர். 

இதில், நேற்று நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில், 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு, காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். ஸ்நாட்ச் முறையில் 86 கிலோ எடையை தூக்கி முந்தைய சாதனையை முறிடியத்தார். ஒட்டுமொத்தமாக 196 கிலோ எடையை தூக்கி, மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில், இன்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 

காமென்வெல்த் போட்டியில் நேற்று, இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது. தற்போது வரை இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது.